புதன், 24 ஆகஸ்ட், 2011

கல்வி வள்ளல் காமராசரின் 106 பிறந்த நாள் விழாவில் நான்!

கோவை மணி மேல்நிலைப்பள்ளி, நாணி கலையரங்கத்தில் கடந்த 15.07.2008 செவ்வாய் அன்று காலை 10.00 க்கு அரசு சார்பில் நடந்த கல்வி வள்ளல் காமராசரின் 106 பிறந்த நாள் விழாவில் த.க .கவுதமனாகிய நான் (3-ஆம் வகுப்பு, வி.எல்.பி.ஜானகியம்மாள் மானிய துவக்கப்பள்ளி, கோவைபுதூர்) காமராசரை பற்றி உரை நிகழ்த்தியதற்காக  மாவட்ட  ஆட்சித்தலைவர் திரு.பழனிக்குமார் இ.ஆ.ப. அவர்கள் பாராட்டிய போது எடுத்த படம்தான் இது. அருகில் கோவை  முதன்மை கல்வி அலுவலர் திரு.கார்மேகம், கோவை  மாநகர தந்தை வெங்கடாசலம், துணை மேயர்  நா.கார்த்திக் மற்றும்  கிழக்கு மண்டல தலைவர் எஸ்.எம்.சாமி     ஆகியோர் உள்ளார்.